Tnpsc District Child Protection Officer Exam Previous Questions And Answer Key 2022 – General Tamil & General Studies in Tamil
DISTRICT CHILD PROTECTION OFFICER IN TAMILNADU APPROVED SCHOOLS AND VIGILANCE SERVICE
1. சொற்களை ஒழுங்குபடுத்துக:
“சொல்லையோ திரும்பத் சொல்வதுண்டு கருத்தையோ திரும்பச்”
(அ) கருத்தையோ சொல்லையோ திரும்பத் திரும்பச் சொல்வதுண்டு
(ஆ) திரும்பத் திரும்பச் சொல்வதுண்டு கருத்தையோ சொல்லையோ
(இ) சொல்லையோ சொல்வதுண்டு கருத்தையோ திரும்பத் திரும்பச்
(ஈ) சொல்லையோ கருத்தையோ திரும்பத் திரும்பச் சொல்வதுண்டு
2. சொற்களை ஒழுங்குபடுத்துக:
“மிகப்பெரிய எதிரியல்ல அறிவாற்றலின் அறியாமை”
(அ) அறியாமை எதியல்ல மிகப்பெரிய அறிவாற்றலின்
(ஆ) அறியாமை எதிரியல்ல அறிவாற்றலின் மிகப்பெரிய
(இ) அறியாமை அறிவாற்றலின் மிகப்பெரிய எதிரியல்ல
(ஈ) மிகப்பெரிய எதிரியல்ல அறிவாற்றலின் அறியாமை
3. ஏற்கனவே நேர்ந்ததைக் கூறும் விடை?
(அ) இனமொழி விடை (ஆ) உற்றது உரைத்தல் விடை
(இ) உறுவது கூறல் விடை (ஈ) நேர் விடை
4. பொருந்தா இணையைக் கண்டுபிடி:
விடை விளக்கம்
(அ) மறை விடை மறுத்துக் கூறும் விடை
(ஆ) உறுவது கூறல் விடை வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதைக் கூறல்
(இ) சுட்டு விடை உடன்பாட்டுக் கூறும் விடை
(ஈ) ஏவல் விடை மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை
5. விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது.
(அ) பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?
(ஆ) பானை எப்படி நமக்குப் பயன்படுகிறது?
(இ) பானை எதனால் நமக்குப் பயன்படுகிறது?
(ஈ) பானை எங்கு நமக்குப் பயன்படுகிறது?
6. “இங்கு நகரப் பேருந்து நிற்குமா”? என்று வழிப்போக்கர் கேட்டது எவ்வகை வினா?
(அ) ஐய வினா (ஆ) அறி வினா (இ) அறியா வினா (ஈ) கொளல் வினா
7. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்:
உரை கவிதாவால் படிக்கப்பட்டது.
(அ) செயப்பாட்டு வினைத்தொடர் (ஆ) செய்வினைத் தொடர்
(இ) தன்வினைத் தொடர் (ஈ)பிறவினைத் தொடர்
8. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக:
செயப்பாட்டு வினையை கண்டறிக:
(அ) சட்டி உடைந்து போயிற்று (ஆ) அப்துல் நேற்று வந்தான்
(இ) கவிதா உரை படித்தாள் (ஈ) பாட்டுப்பாடுகிறாள்
9. “உயிரும் உடலும் போல” எவமை கூறும் பொருள் தெளிக:
(அ) ஒற்றுமை (ஆ) வேற்றுமை (இ) அன்பு (ஈ) பகை
10. உவமையால் விளக்கப் பெறும் பnhருத்தமான பொருளைத் தேர்க:
கண்ணை இமை காப்பது போல
(அ) ஒற்றுமை (ஆ) வேற்றுமை (இ) பாதுகாப்பு (ஈ) ஏமாற்றம்
11. தவறான கலைச் சொல்லைக் கண்டறிக:
(அ) Leadership-தலைமைப் பண்பு
(ஆ) Member of Legislative Assembly-சட்டமன்ற உறுப்பினர்
(இ) Punctuation-விழிப்புணர்வு
(ஈ) Equestrian-குதிரையேற்றம்
12. கலைச்சொல்:
Satellite
(அ) நுண்ணறிவு (ஆ) செயற்கைக்கோள்
(இ) செயற்கை நுண்ணறிவு (ஈ) மீத்திறன் கணினி
13. விடை வகைகள்:
“தேர்வு எழுதி விட்டாயா?”என்ற வினாவிற்கு “எழுதாமல் இருப்பேனா?” என்று கூறுவது
(அ) உற்றது உரைத்தல் விடை (ஆ) வினா எதிர் வினாதல் விடை
(இ) உறுவது கூறல் விடை (ஈ) வெளிப்படை விடை
14. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களைக் கண்டறிதல்:
(அ) சர்வர் (Server)-செதுக்கி
(ஆ) ஃபோல்டர்(Folder) -வையக விரிவு வலை வழங்கி
(இ) கர்சர்(Cursor) – ஏவி அல்லது சுட்டி
(ஈ) க்ராப்(Crop)-உறை
15. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்:
கம்யூட்டர்
(அ) ரோபோ (ஆ) கணினி (இ) மிஷின் (ஈ) காலிங்பெல்
16. ஊர்ப்பெயர்களின் மரூஉ-வை எழுதுக:
புதுச்சேரி என்பதன் மரூஉ
(அ) புதுக்கோட்டை (ஆ) புதுப்பேட்டை (இ) புதுவை (ஈ) புதுச்சேரி
17. ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக:
நாகப்பட்டினம் என்பதன் மரூஉ
(அ) நாகப்பட்டினம் (ஆ) நாகை (இ) நாகூர் (ஈ) பட்டினம்
18. நிறுத்தற்குறிகளை அறிக (எது சரியானது)
(அ) மகிழ்ச்சி, வியப்பு,அச்சம்,அவலம், இரங்கல் முதலான உணர்ச்சியை வெளியிடும் இடங்களில் வியப்புக்குறி இட வேண்டும்.
(ஆ) மகிழ்ச்சி, வியப்பு, அச்சம், அவலம், இரங்கல் முதலான உணர்ச்சியை, வெளியிடும் இடங்களில், வியப்புக்குறி இட வேண்டும்.
(இ) மகிழ்ச்சி, வியப்பு, அச்சம் அவலம் இரங்கல் முதலான உணர்ச்சியை வெளியிடும் இடங்களில் வியப்பு குறி இட வேண்டும்.
(ஈ) மகிழ்ச்சி வியப்பு அச்சம், அவலம் இரங்கல் முதலான உணர்ச்சியை வெளியிடும் இடங்களில் வியப்பு குறி இட வேண்டும்.
19. சரியான நிறுத்தற்குறியிட்ட சொற்றொடரினைத் தேர்ந்தெடு:
(அ) பொழிலன் தோட்டத்திற்குச் சென்று வாழை இலை, பறித்து வந்தான்
(ஆ) பொழிலன், தோட்டத்திற்குச் சென்று, வாழை இலை, பறித்து வந்தான்
(இ) பொழிலன் தேட்டத்திற்குச் சென்று, வாழை இலை பறித்து வந்தான்
(ஈ) பொழிலன், தோட்டத்திற்குச் சென்று, வாழை இலை பறித்து வந்தான்
20.எழுத்து வழக்கு தொடரைத் தேர்ந்தெடு:
(அ) எங்கதெ பெரிசு (ஆ) எங்கதெ பெரியது
(இ) என் கதை பெரிசு (ஈ) என் கதை பெரியது
21. “சொல்றேன்” என்பதன் எழுத்து வழக்கு
(அ) சொல்லுவேன் (ஆ) சொன்னேன் (இ) சொல்வேன் (ஈ) சொல்கின்றேன்
22. சொற்களை சரியாக இணைத்து புதிய சொல் உருவாக்குக:
புளியங் ———-
(அ) கன்று (ஆ) குருத்து (இ) பிள்ளை (ஈ) மடலி
23. மனித நேயம் என்ற சொல்லில் இணைந்துள்ள இரண்டு சொற்களைக் கண்டறிக:
(அ) மனிதன், நேயம் (ஆ) மனிதம், நேயம்
(இ) மனிதர், நேயம் (ஈ) மனிதள், நேயம்
24. இவற்றுள் எது சரியானது?
நிகழ்காலத்தைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
(அ) சுடர்க்கொடி பாடினாள் (ஆ) சுடர்க்கொடி பாடுகிறாள்
(இ) சுடர்க்கொடி (ஈ) சுடர்க்கொடியால் பாடப்பட்டது
25. மல்லிகைப் பந்தலின் கீழே தங்கினான்
தங்கினான் என்பது எக்காலத்தைக் குறிக்கும்.
(அ) நிகழ்காலம் (ஆ) இறந்தகாலம் (இ) எதிர்காலம் (ஈ) சங்கதாலம்
26. சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு
(அ) ஆழ்வார்கள் எத்தனை பேர்? (ஆ) ஆழ்வார்கள் பத்து பேர்?
(இ) ஆழ்வார்கள் தங்கும் இடம்? (ஈ) ஆழ்வார்கள் பாடிய பாடல்?
27. சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு:
(அ) அறநெறிச்சாரம் என்பதன் பொருள் என்ன?
(ஆ அறநெறிச்சாரம் அறிவுடையது?
(இ) அறநெறிச்சாரம் விளக்கம் தருவது?
(ஈ) அறிநெறிச்சாரம் பொருள் அறிவது?
28. ஒரு சொல்லால் தொடரின் இரு இடங்களை நிரப்புக:
எனக்கு ———- பங்கு பிரித்துக் கொடுக்க வா!.
கீழே ஈரம் பார்த்து உன் ———-ஐ வை.
(அ) கை (ஆ) கால் (இ) அகல் (ஈ) அலை
29.வல்லினம் மிகும் மிகாத் தொடர்களின் பொருளறிந்து பொருத்துக:
அ. பாலை பாடினான் 1.தேரை என்னும் உயிரினத்தைப் பார்த்தான்
ஆ. பாலைப் பாடினான் 2. தேரினைப் பார்த்தான்
இ. தேரை பார்த்தான் 3. பாலினைப் பாடினான்
ஈ. தேரைப் பார்த்தான் 4. பாலைத் திணை பாடினான்
அ ஆ இ ஈ
அ. 4 1 3 2
ஆ. 2 3 1 4
இ. 4 3 1 2
ஈ, 2 4 1 3
30. பின்வரும் தொடரில் உள்ள நால்வகை சொற்களில் உரிச்சொல்லை தேர்ந்தெடு:
வளவனும் தங்கையும் மாநகரப் பேருந்தில் ஏறினர்.
(அ) ஏறினர். (ஆ) வளவனும் தங்கையும் (இ) பேருந்து (ஈ) மாநகரம்
31. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க:
(முழை)
(அ) சிங்கம் ———–யில் வாழும் (ஆ) பறவை ———-யின் வாழும்
(இ) யானை ————-யில் வாழும் (ஈ) எலி ———-யில் வாழும்
32. இரு பொருள் தருக.
(துய்ப்பது)
(அ) உண்பது, தூய்மை (ஆ) கற்பது, தருதல்
(இ) நுகர்வது, தூய்மை (ஈ) தூய்மை, தருதல்
33. இரு பொருள் தருக.
(நூல்)
(அ) ஆடை நெய்வது, மூதுரை அறநூல் (ஆ) பூணூல், செய்தி
(இ) அறநூல், மாலை (ஈ) ஆடை தைப்பது, நேரம்
34. அடைப்புக்குறிக்குள் உள்ள சொற்கள் பொருந்தக்கூடிய தொடரைக் கண்டறிக:
(பட்டு – பாட்டு)
(அ) கவலைப்பட்ட வாழ்விற்குப்ப பாட்டு அவசியம்
(ஆ) தூண்டிலில் பட்ட மீஐனப் பாட்டுப்ப பாடி இழுத்தான்
(இ) பட்டு மெத்தையில் பாட்டுக் கேட்டபடி தூங்கினாள்
(ஈ) துன்பப்பட்டு வாழும் வாழ்வில் பாட்டுக்கு என்ன வேலை?
35. குறில்-நெடில் மாற்றம், பொருள் வேறுபாடு தருக:
சிறு – சீறு
(அ) வறுமை – புலி (ஆ) கருமை – வலிமை
(இ) சிறுமை – பாய்தல் (ஈ) கருவி – சிறியது
36. கூற்று : பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லத்தகாத சொற்களைத் தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது மங்கலம் ஆகும்
காரணம் : பொற்கொல்லர் பொன்னைப் “பறி” என்று உரைப்பர்
(அ) கூற்று, காரணம் இரண்டும் சரி (ஆ) கூற்று சரி, காரணம் தவறு
(இ) கூற்று தவறு காரணம் சரி (ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
37. கூற்று: வாய்ப்பூட்டுச் சட்டத்திற்கு ஆட்பட்ட தலைவர்கள் வட இந்தியாவில் பாலகங்காதர திலகரும், தென்னாட்டில் முத்துராமலிங்கரும் ஆவர்.
காரணம் : ஆங்கில ஆட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் அச்சட்டம் கொண்டு வரப்பட்டது,
(அ) கூற்று, காரணம் இரண்டும் சரி (ஆ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
(இ) கூற்று சரி; காரணம் தவறு (ஈ) கூற்று தவறு காhணம் சரி
38. கலைச்சொல் அறிதல்:
Paddy
(ஆ) சோளப்பயிர் (ஆ) நெற்பயிர் (இ) வாழை (ஈ) கரும்பு
39. கலைச்சொல் அறிதல்:
Poet
(அ) ஓவியர் (ஆ) எழுத்தாளர் (இ) கவிஞர் (ஈ) பாடகர்
40. அடிவகைகளில் தவறான இணை எது?
(அ) தாள்-கேழ்வரகு (ஆ) தண்டு-வாழை (இ) தூறு-புதர் (ஈ) கோல்-குத்துச்செடி
41. பூக்கையைக் குவித்து
பூவே புரிவோடு காக்க
என்று வேண்டியது
(அ) கருணையன் பூக்களுக்காக (ஆ) கருணையன் எலிசபெத்துக்காக
(இ) எலிசபெத் தமக்காக (ஈ) எலிசபெத் பூமிக்காக
42. சொல்லும் பொருளும் சரியானது எது?
(அ) பாசவர்-வெற்றிலை விற்பவர் (ஆ) ஓசுநர்-நெய்பவர்
(இ) மண்ணுள் வினைஞர்-சிற்பி (ஈ) வாசவர்-எண்ணெய் விற்பவர்
43. தொகையின் வகை எது?
“பெரிய மீசை சிரித்தார்”
(அ) வேற்றுமைத் தொகை (ஆ) உம்மைத்தொகை
(இ) அன்மொழித் தொகை (ஈ) பண்புத்தொகை
44. அருந்துணை என்பதை பிரித்தால்
(அ) அருமை + துணை (ஆ) அரு + துணை
(இ) அருமை + இணை (ஈ) அரு + இணை
45. சரியான அகர வரிசை எது?
(அ) உழவு, மண்,ஏர், மாடு (ஆ) மண், மாடு, ஏர், உழவு
(இ) உழவு, ஏர், மண், மாடு (ஈ) ஏர், உழவு, மாடு, மண்
46. வீரனைப் புகழ்ந்து பாடுவது எந்த திணை?
(அ) வெட்சித் திணை (ஆ) வஞ்சித் திணை
(இ) நொச்சித்திணை (ஈ) பாடாண் திணை
47. சரியான கூட்டுப்பெயரைத் தேர்ந்தெடு;
வேலமரம்
(அ) வேலந்தோப்பு (ஆ) வேல மரங்கள் (இ) வேலங்காடு (ஈ) வேலக்கொல்லை
48. சரியான தொடரைத் தேர்ந்தெடுக்க:
(அ) உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் கழுத்தை இடமாகக்கொண்டு பிறக்கின்றன.
(ஆ) கழுத்தை இடமாகக் கொண்டு உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் பிறக்கின்றன.
(இ) பன்னிரண்டு உயிர் எழுத்துக்கள் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
(ஈ) பிறக்கினற் உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் கழுத்தை இடமாகக் கொண்டு
49. பின்வருவனவற்றுள் முறையான தொடரைத் தேர்ந்தெடுக்க
(அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு
(ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு
(இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு
(ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு
50. பிழை திருத்துக:
கோவலன் சிலம்பு விற்கப் போனாள்.
(அ) கோவலன் சிலம்பு விற்கப் போனான் (ஆ) கோவலன் சிலம்பு விற்கப் போணாள்
(இ) கோவலன் சிலம்பு விற்கப் போனார் (ஈ) கோவலன் சிலம்பு விற்கப் போகின்றார்
51. பிழை திருத்துக:
கண்ணகி சிலம்பு அணிந்தான்
(அ) கண்ணகி சிலம்பு அணிவித்தாள் (ஆ) கண்ணகி சிலம்பு அணிந்துள்ளாள்
(இ) கண்ணகி சிலம்பு அணிந்தது (ஈ) கண்ணகி சிலம்பு அணிந்தாள்
52. சொல் – பொருள் பொருத்துக: (எதிர்ச்சொல் பொருத்துக)
(அ) எளிது 1. புரவலர்
(ஆ) ஈதல் 2. அரிது
(இ) அந்நியர் 3. ஏற்றல்
(ஈ) இரவலர் 4. உறவினர்
அ ஆ இ ஈ
அ. 3 1 2 4
ஆ. 2 3 4 1
இ. 1 4 3 2
ஈ. 4 2 1 3
53. சொல் – பொருள் பொருத்துதல்:
அ. நாற்று 1. பறித்தல்
ஆ. நீர் 2. பாய்ச்சுதல்
இ. கதிர் 3. நடுதல்
ஈ. களை 4. பாய்ச்சுதல்
அ ஆ இ ஈ
அ. 3 4 2 1
ஆ. 3 1 4 2
இ 4 2 1 3
ஈ. 2 3 1 4
54. ஒருமை பன்மை பிழை:
குழந்தைகள் ———- இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்கின்றனர்
(அ) தாம் (ஆ) தம்மால் (இ) தமக்கு (ஈ) தன்னால்
55. ஒருமை பன்மை பிழை நீக்குக:
சிறுமி ———— கையில் மலர்களை வைத்திருந்தாள்.
(அ) தன் (ஆ) தாம் (இ) தனது (ஈ) தமது
கீழ்கண்ட பத்தியினைப் படித்து வினாவிற்கான சரியான விடையை தேர்ந்தெடு:
ஆசியாவிலேயே மிகப்பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது தஞ்சை சரசுவதி மகால் நூலகம். இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ஒலைச்சுவடிகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. உலகளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம் கன்னிமாரா நூலகமே. இது சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் என்ற பெருமைக்கு உரியது. திருவனந்தபுரம் நடுவண் நூலகம். கோல்கத்தாவில் 1836-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1953இல் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட தேசிய நூலகமே இந்தியாவின் மிகப்பெரிய நூலகமாகும். இது ஆவணக் காப்பக நூலகமாகவும் திகழ்கிறது. உலகில் மிகப் பெரிய நூலகம் என்ற பெருமையைத் தாங்கி நிற்பது அமெரிக்காவில் உள்ள லைப்ரரி ஆப் காங்கிரஸ்.
56. உலகளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம் எது?
(அ) சரசுவதி மகால் நூலகம் (ஆ) கன்னிமாரா நூலகம்
(இ) திருவனந்தபுரம் நடுவண் நூலகம் (ஈ) தேசிய நூலகம்
57. சரசுவதி மகால் நூலகம் அமைந்துள்ள இடம் யாது?
(அ) தஞ்சாவூர் (ஆ) திருச்சி (இ) கோவை (ஈ) சென்னை
58. தேசிய நூலகம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த ஆண்டு
(அ) 1836 (ஆ) 1953 (இ) 1957 (ஈ) 1837
59. உலகில் மிகப் பெரிய நூலகம் எது?
(அ) தஞ்சை சரஸ்வதி மஹால் (ஆ) கன்னிமாரா நூலகம்
(இ) லைப்ரரி ஆப் காங்கிரஸ் (ஈ) லைப்ரரி ஆப் அமெரிக்கா
60. தேசிய நூலகத்தின் சிறப்பம்சம்
(அ) ஓலைச்சுவடிகள் (ஆ) புத்தக நகல்கள் (இ) ஆவணக்காப்பகம் (ஈ) படிமங்கள்
61. பயன் + இலா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
(அ) பயன்னில்லா (ஆ) பயன்இலா (இ) பயனிலா (ஈ) பயன்இல்லா
62. “சீரிளமை” – பிரித்தெழுதுக
(அ) சீர்+இளமை (ஆ) சீர்மை+இளமை (இ) சீரி+இளமை (ஈ) சீற்+இளமை
63. வெங்கரி – பிரித்தெழுதுக:
(அ) வெம்+கரி (ஆ) வெங்+கரி (இ) வெண்+கரி (ஈ) வெம்மை+கரி
64. சேர்த்து எழுதுக:
முத்து + சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
(அ) முத்துசுடர் (ஆ) முச்சுடர் (இ) முத்துடர் (ஈ) முத்துச்சுடர்
65. முதுமை + மொழி : சேர்த்து எழுதும் போது கிடைக்கும் சொல் அறிக:
(அ) முதுமொழி (ஆ) முதியமொழி (இ) முதல்மொழி (ஈ) முதுமைமொழி
66. பிரித்து எழுதுக:
உயர்வடைவோம்
(அ) உயர்+வடைவோம் (ஆ) உயர்+வடை+ஓம்
(இ) உயர்வு+அடைவோம் (ஈ) உயர்+அடைவோம்
67. பிரித்து எழுதுக:
“செம்பயிர்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) செம்மை+பயிர் (ஆ) செம்+பயிர் (இ) செமை+பயிர் (ஈ) செம்பு+பயிர்
68. எல் – எதிர்ச்சொல் தருக:
(அ) பகல் (ஆ) எல்லை (இ) தானியம் (ஈ) இரவு
69. வெற்பு – எதிர்ச்சொல் தருக:
(அ) மலை (ஆ) பள்ளம் (இ) மழை (ஈ) பட்டம்
70. பொருந்தாத இணை எது?
(அ) க்ராப்-செதுக்கி (ஆ) கர்சர்-ஏவி (இ) சர்வர்-உலவி (ஈ) ஃபோல்டர்-உறை
71. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
“குழல்கள் செய்ய இயலாத மரங்கள்”
(அ) கருங்காலி (ஆ) செங்காலி (இ) சந்தனம் (ஈ) அகில்
72. பொருந்தாத இணையைக் கண்டறிக:
(அ) துவைi-பவளம் (ஆ) மல்லம்-வளம் (இ) கோடு-கொம்பு (ஈ) செறு-செருக்கு
73.பொருந்தாத இணையைக் கண்டறிக:
(அ) ஏறுகோள்-எருதுகட்டி (ஆ) திருவாரூர்-கரிக்கையூர்
(இ) ஆதிச்சநல்லூர்-அரிக்கமேடு (ஈ) பட்டிமன்றம் – பட்டிமண்டபம்
74. பொருந்தா இணையைக் கண்டறிக:
(அ) நாற்று-நடுதல் (ஆ) நீர்-பாய்ச்சுதல் (இ) கதிர்-அறுத்தல (ஈ) களை-அடித்தல்
75. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
(அ) அப்துல்கலாம் பிறந்த நாள்-ஆசிரியர் நாள்
(ஆ) விவேகானந்தர் பிறந்த நாள் – தேசிய இளைஞர் நாள்
(இ) காமராசர் பிறந்த நாள் – கல்வி வளர்ச்சி நாள்
(ஈ) ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் – குழந்தைகள் நாள்
76. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
(அ) திங்கள்-மாதம் (ஆ) பகலவன்-கதிரவன்
(இ) மெய்-உண்மை (ஈ) பொய்மை-மெய்ம்மை
77. சந்திப்பிழை அற்ற வாக்கியங்களை அறிக:
1. புதிகம் என்பது பத்துப்பாடல்களைக் கொண்டது.
2. பதிகம் என்பது பத்து பாடல்களைக் கொண்டது.
3. விழாக்களின் போது இசை கருவிகளை இசைப்பது வழக்கம்.
4. விழாக்கிளன் போது இசைக் கருவிககளை இசைப்பது வழக்கம்.
(அ) 1 மற்றும் 3 சரி (ஆ) 2 மற்றும் 3 சரி (இ) 1 மற்றும் 4 சரி (ஈ) 2 மற்றும் 4 சரி
78. இளமைப் பெயர்கள் கண்டு பொருத்துக:
அ. புலி 1. குட்டி
ஆ. சிங்கம் 2. கன்று
இ. ஆடு 3. குருளை
ஈ. யானை 4. பறழ்
அ ஆ இ ஈ
அ. 4 3 1 2
ஆ. 3 4 2 1
இ. 3 1 4 2
ஈ. 4 1 2 3
79. வழுவற்ற தொடரைக் காண்க:
(அ) கைகள் இரண்டும் பிறர்க்கு உதவவே எனச் சான்றோர் கருதின
(ஆ) கைகள் இரண்டும் உதவவே என சான்றோர்கள் கருதின
(இ) கை இரண்டும் உதவவே எனச் சான்றோர் கருதினர்
(ஈ) கைகள் இரண்டும் உதவவே எனச் சான்றோர்கள் கருதினர்
80. வழுவுச் சொல்லற்ற தொடரை அறிக:
(அ) சிற்பி சிலையைச் செய்தான் (ஆ) சிற்பி சிலையைச் செதுக்கினான்.
(இ) சிற்பி சிலையை வனைந்தாள் (ஈ) சிற்பி சிலையை வார்த்தான்
81. வல்லினம் மிகா இடத்தைக் காண்க:
(அ) குடி தண்ணீர் (ஆ) கனா கண்டேன் (இ) தனி சிறப்பு (ஈ) பூ பந்தல்
82. Crying Child will get milk:
இணையான தமிழ்ப் பழமொழியை எழுதுக:
(அ) பாலைப் பார்த்தால் குழந்தை அழும் (ஆ) அழுத பிள்ளை பால் குடிக்கும்
(அ) அழுதால் குழந்தைக்குப் பால் கிடைக்கும் (ஈ) அழுத பிள்ளை பால் பால் குடிக்காது
83. சந்திப்பிழையற்ற வாக்கியங்களைக் கண்டறிக:
(அ) கால வெள்ளத்தில் கரைந்துப்போன மொழிகளுகிடையில் நீந்தி தன்னை நிலை நிறுத்தி கொண்டுள்ளது தமிழ்
(ஆ) கால வெள்ளத்தில் கரைந்துப்போன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை தானே நிலை நிறுத்திக்கொண்டுள்ளதுத் தமிழ்
(இ) கால வெள்ளத்தில் கரைந்து போன மொழிகளுக்கிடையில் நீந்தி தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளதுத் தமிழ்
(ஈ) கால வெள்ளத்தில் கரைந்து போன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது தமிழ்
84. ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக:
(அ) Wealth-கடமை (ஆ) Courtesy-நற்பண்பு
(இ) Poverty-பொதுவுடைமை (ஈ) Ambition-அயலவர்
85. ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக:
(அ) Herostone-புடைப்பியல் (ஆ) Epigraphy-பண்பாட்டியல்
(இ) Excavation-அகழாய்வு (ஈ) Inscription-கல்வெட்டு
86. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை எழுதுக:
திணை – தினை
(அ) உயர்திணை-ஊர் (ஆ) ஒழுக்கம்-தானியம்
(இ) திண்ணுதல்-வாக்கியம் (ஈ) திண்ணை-துணிவு
87. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை எழுதுக:
அலை – அழை
(அ) வரவழைத்தல், கடலலை (ஆ) கடலலை, வரவழைத்தல்
(இ) அலைதல், வரவழைத்தல் (ஈ) அலைத்தல், வரவழைத்தல்
88. ஒரு பொருள் தரும் பல சொற்கள்:
சரியான இணையைத் தேர்ந்தெடு:
(அ) நாவாய், வங்கம் (ஆ) ஆழி,சுழி (இ) அழி,ஆழி (ஈ) கப்பல்,பேருந்து
89. ஆழி,முந்நீர்,பௌவம் ஆகிய சொற்கள் கீழ்கண்டவற்றில் எதைக் குறிக்கிறது?
(அ) சக்கரம் (ஆ) மூன்று (இ) கடல் (ஈ) வெந்நீர்
90. “படி” என்னும் வேர்ச்சொல்லின் பதம் அறிக:
(அ) படித்தான் (ஆ) பாடினான் (இ) கற்றான் (ஈ) கற்பனை
91. “பாடினாள்” – வேர்ச்சொல்லைத் தருக:
(அ) பா (ஆ) வா (இ) பாடு (ஈ) ஆடு
92. “ஆடு” என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் வடிவம் தருக:
(அ) ஆடுதல் (ஆ) ஆடி (இ) ஆடியவன் (ஈ) ஆடினான்
93. “ஆடு” என்ற வேர்ச்சொல்லில் இருந்து வினைஎச்சத்தை உருவாக்குக:
(அ) ஆடி (ஆ) ஆடுதல் (இ) ஆடிய (ஈ) ஆடினான்
94. அகரவரிசைப்படி சொற்களை சீர்; செய்க:
(அ) கிண்ணம்,காட்சி,கீரி,கல்வி,கேள்வி (ஆ) கீரி,கிண்ணம்,காட்சி,கல்வி,கேள்வி
(இ) கல்வி, காட்சி,கிண்ணம்,கீரி,கேள்வி (ஈ) காட்சி,கிண்ணம்,கீரி,கல்வி,கேள்வி
95. அகரவரிசைப்படி சொற்களை சீர்; செய்க:
(அ) சூடு,செடி,சுடு,சோழன்,சேரன் (ஆ) சுடு,சூடு,செடி,சேரன்,சோழன்
(இ) செடி,சுடு,சேரன்,சோழன்,சூடு (ஈ) சோழன்,சேரன்,சுடு,சூடு,செடி
96. அகரவரிசையில் எழுதுக:
(அ) முதல்,மீமிசை,மிசை,மலை,மாலை (ஆ) மிசை,மீமிசை,மலை,மாலை,முதல்
(இ) மலை,மாலை,மிசை,மீமிசை,முதல் (ஈ) மலை,மாலை,முதல்,மிசை,மீமிசை
97. கீழ்க்காணும் சொற்களை அகரவரிசைப்படுத்து:
(அ) பாட்டி,பணம்,பேட்டை,போ,பெட்டி (ஆ) பணம்,பாட்டி,பெட்டி,பேட்டை,போ
(இ) பெட்டி,பணம்,பேட்டை,போ,பாட்டி (ஈ) போ,பாட்டி,பெட்டி,பணம்,பேட்டை
98. கீழ்க்காணும் சொற்களை அகரவரிசைப்படுத்து:
(அ) வேற்றுமை,வீடு,வாரம்,விசிறி,வலிமை
(ஆ) வீடு,வாரம்,வேற்றுமை,விசிறி,வலிமை
(இ) வாரம்,வேற்றுமை,விசிறி,வீடு,வலிமை
(ஈ) வலிமை,வாரம்,விசிறி,வீடு,வேற்றுமை
99. கீழ்க்காணும் சொற்களை அகரவரிசைப்படுத்து:
(அ) நான்கு,நன்மை,நெருப்பு,நீட்சி,நிலம் (ஆ) நிலம்,நெருப்பு,நான்கு,நீட்சி,நன்மை
(இ) நன்மை,நான்கு,நிலம்,நீட்சி,நெருப்பு (ஈ) நெருப்பு,நிலம்,நன்மை,நீட்சி,நான்கு
100. அகரவரிசையில் எழுதுக:
(அ) பள்ளம்,பாலை,பிணி,பீடு,புணை (ஆ) பாலை,பள்ளம்,பீடு,புணை,பிணி
(இ) பிணி,பள்ளம்,பீடு,புணை,பாலை (ஈ) பீடு,பாலை,பள்ளம்,புணை,பிணி